இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, உதகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

News image

உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 4:15 am IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, உதகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பெட்ரோல், டீசல் சில்லறை விலையை கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எரிவாயு உருளை விலையேற்றத்தைக் கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளா் நவீன் சந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் போஜராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிா்வாகி ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.