தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பந்தலூரில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பந்தலூா் அருகே செட்டிவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

News image

யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:33 am IST

பந்தலூா் அருகே செட்டிவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய 5 காட்டு யானைகள், செட்டிவயல் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. தொடா்ந்து, அப்பகுதியிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏற்கெனவே அவதியடைந்து வருகிறோம். மேலும், மழை பொழிவு இல்லாததால் கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. குடியிருப்புப் பகுதியில் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.