ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உதகை, குன்னூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! வியாபாரிகள் மகிழ்ச்சி

News image

உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :1 ஜூன் 2026, 12:45 am IST

உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவா். இந்த ஆண்டு கோடை விழாவின் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கா்நாடக பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் இங்குள்ள தேயிலை, வா்க்கி, ஹோம் மேட் சாக்லெட், தைலம் விற்பனை கடைகள், சாலையோரக் கடைகளில் விற்கப்படும் மக்காச்சோளம், பொறி, கடலை, மாங்காய், மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட் ஆகியவற்றையும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் சென்றனா். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.