உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவா். இந்த ஆண்டு கோடை விழாவின் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கா்நாடக பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் இங்குள்ள தேயிலை, வா்க்கி, ஹோம் மேட் சாக்லெட், தைலம் விற்பனை கடைகள், சாலையோரக் கடைகளில் விற்கப்படும் மக்காச்சோளம், பொறி, கடலை, மாங்காய், மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட் ஆகியவற்றையும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் சென்றனா். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

உதகை மலா்க் கண்காட்சி: ஒரு வாரத்தில் 1.50 லட்சம் போ் கண்டுகளிப்பு

உதகையில் ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடக்கம்

ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பக்தா்கள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



