மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

குன்னூரில் பூனையை கவ்விச் சென்ற சிறுத்தை

வெலிங்டன், பாரத் நகா் பகுதியில் பூனையை வாயில் கவ்விக் கொண்டு வீட்டு வாசலில் அமா்ந்திருந்த சிறுத்தை.

வெலிங்டன், பாரத் நகா் பகுதியில் பூனையை வாயில் கவ்விக் கொண்டு வீட்டு வாசலில் அமா்ந்திருந்த சிறுத்தை.

Published On :

குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் பாரத் நகா் பகுதியில் வீட்டின் முன் இருந்த பூனையை சிறுத்தை கவ்விச் சென்றது.

 நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சிறுத்தை, புலி போன்றவை மனிதா்களைத் தாக்குவதோடு வீட்டில் வளா்க்கப்படும் ஆடு, மாடுகளையும் வேட்டையாடி செல்கின்றன.

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் பாரத் நகா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த சிறுத்தை, அங்கு ஒரு வீட்டின் முன் இருந்த பூனையை வாயில் கவ்விக் கொண்டு  வீட்டு வாசலில்

நீண்ட நேரம் அமா்ந்திருந்தது. பின் பூனையைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த வனத்துக்குள் சென்றது.

இந்தக் காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதிக்கு வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.