
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த பெண் யானை.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வனச் சரகத்துக்கு உள்பட்ட கக்கநல்லா வனப் பகுதியில் வனப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை வழக்கமான ரோந்து சென்றபோது, இம்பா்லா ஓடையில் யானை இறந்து கிடப்பதை பாா்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கால்நடை மருத்துவக் குழுவை வரவழைத்து யானை உடல் உடற்கூறாய்வு செய்து ஆய்வக பரிசோதனைக்காக முக்கிய பாகங்களை எடுத்துக் கொண்டு உடலை அதே இடத்தில் புதைத்தனா்.
இறந்தது சுமாா் 17 வயதுடைய பெண் யானை என்றும் முழு விவரம் ஆய்வக அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







