நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

17 இல் சண்டீகரில் லங்கடி சாம்பியன் போட்டி:தமிழக ஆடவர், மகளிர் அணி பங்கேற்பு

சண்டீகரில் வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 ஆவது தேசிய சீனியர் லங்கடி சாம்பியன் போட்டியில்(நொண்டி அடித்துத் தொடுதல்) தமிழக ஆடவர், மகளிர் அணியினர் பங்கேற்க உள்ளனர்.

Updated On :12 மே 2013, 6:36 am IST

சண்டீகரில் வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 ஆவது தேசிய சீனியர் லங்கடி சாம்பியன் போட்டியில்(நொண்டி அடித்துத் தொடுதல்) தமிழக ஆடவர், மகளிர் அணியினர் பங்கேற்க உள்ளனர்.

 தமிழ்நாடு மாநில லங்கடி கழகம் திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சங்கம் சார்பில் லங்கடி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 5 ஆவது தேசிய சீனியர் லங்கடி சாம்பியன் போட்டிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தயார் செய்யப்பட்டுள்ளனர்.

 சண்டீகரில் வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் தமிழக ஆடவர் அணியில் 15 வீரர்கள், மகளிர் அணியில் 15 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

  திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த லங்கடி வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திருப்பூரில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், லங்கடி அணி வீரர்கள், வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இதில், திருப்பூர் பெரியாயிபாளையம் திருவள்ளூவர் அரசு மேல்நிலைப் பள்ளிச் சேர்ந்த லங்கடி பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சீருடைகளை  மாநில லங்கடி கழகத் தலைவர் சீகல் துரைசாமி வழங்கினார்.

 மாநில லங்கடி கழக செயல் தலைவர் ஜெயசித்ரா எம்.சண்முகம், சேர்மன் டி.பி.முத்துசாமி,  பொருளாளர் என்.கே.பாலசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் ஆர்.முத்துசாமி, மாவட்ட லங்கடி கழகத் தலைவர் சன்வின்குமார், உடற்கல்வி ஆசிரியர் ராஜன் உள்ளிட்டோர் லங்கடி வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.