
திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு
திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் விருது பெற்ற திருப்பூரைச் சேர்ந்த மாணவ, மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் விருது பெற்ற திருப்பூரைச் சேர்ந்த மாணவ, மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 133 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், திருப்பூர் மாவட்டம், பாளையக்காடு, எம்.என்.சிக்கண்ண செட்டியார் மெட்ரிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் கே.ஓவியா மற்றும் அவிநாசியில் உள்ள அவிநாசி கல்வி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் எஸ்.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் விருது பெற்றனர்.விருது பெற்ற இருவரையும் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




