உடுமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அங்குப் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கத் தலைவர் கே.ஆறுச்சாமி மரக்கன்றை நட்டு வைத்தார். கூட்டுறவுத் துறை மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ.சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் தும்பலப்பட்டி எம்.மனோகரன், மேலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.