குழந்தைகள் புத்தகக் கண்காட்சி
தேசிய நூலக வார விழாவையொட்டி உடுமலை கிளை நூலகம் எண் 2-இல் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.


தேசிய நூலக வார விழாவையொட்டி உடுமலை கிளை நூலகம் எண் 2-இல் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
புத்தகக் கண்காட்சியை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.வெள்ளைச்சாமி துவக்கிவைத்தார்.
ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளர் ராமதாஸ் வாழ்த்துரை வழங்கினார். இதில் நகராட்சி விரிவு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புதிய நூல்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து "வாசிப்பை நேசிப்போம்' என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, ஆசிரியர் கா.மு.அலாவுதீன் தலைமை வகித்தார். நூலகர் கணேசன் வரவேற்றார். இதில் வாசிப்புத் திறன் வளர நூலகத்தை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...