தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

நீட் தேர்வு: திமுகவின் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது கொமுக ஆதரவு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக வியாழக்கிழமை நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On :27 ஜூலை 2017, 7:48 am IST

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக வியாழக்கிழமை நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் எம்.தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தேவையான காலக்கெடு வழங்காமல் நீட் தேர்வு முறையை மத்திய அரசு அறிவித்ததால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நீட் தேர்வு வினாக்கள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதாலும்,  ஒரே மாதிரியான கேள்வித்தாள் முறை இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டதாலும் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு சிரமத்தை ஏற்படுத்தியது.
மேலும், கிராமப்புறங்களில் படித்த மாணவர்கள் தங்களின் திறமையை வெளிக்கொணர்வதற்கு நீட் தேர்வு முறை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் பறிபோவதுடன், அண்டை மாநில மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வழி செய்கிறது. எனவே, மத்திய அரசு தேவையான காலக்கெடு வழங்கி பாடத் திட்டத்தை முன்னரே அறிவித்து, வரும் காலங்களில் இதை அமல்படுத்தலாம்.
எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசு அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் ஆதரவு  தெரிவிப்பதுடன், அவர்களோடு போராட்டத்திலும் பங்கேற்க உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.