சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

உடுமலையில் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:59 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளர் கே.எஸ்.ரணதேவ் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
உடுமலை ரயில் நிலையத்துக்கு வந்த மதுரை - கோவை ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில்...
ரயில் மறியலில் ஈடுபட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருப்பூர், ஊத்துக்குளி சாலை, 2-ஆவது ரயில்வே கேட் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.