வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விசைத்தறியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:48 am

திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு,  சங்கத் தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி, முத்துக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.  
கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க ஒப்புக்கொள்ளாவிடில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளையும் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
இக்கூட்டத்தில் விசைத்தறியாளர்கள் கரைப்புதூர் ராஜேந்திரன், ஆறுக்குட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சக்திவேல் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.