அவிநாசி ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வந்து ராயம்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்ரல் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி கிராம மக்கள் அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்கு மண்குதிரையை ஊர்வலமாக எடுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் அவிநாசி, ராயம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த 3 மண் குதிரைகளை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக ஆகாசராயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை எடுத்து வந்தனர்.
நடுவச்சேரி சாலை, மடத்துப்பாளையம் சாலை, சேவூர் சாலை, கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, மங்கலம் சாலை வழியாக இவர்கள் ஆகாசராயர்கோயிலை அடைந்தனர். அப்போது ஊர்வலத்தில் வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள், குடிநீர், பழரசம், நீர்மோர், மாலைகள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனர்.
ஆகாசராயர் கோயிலில் மண்குதிரைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதைத்தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் முடிந்ததும் மக்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்வதே பாஜகவின் வாடிக்கை! -பினராயி விஜயன்

தர்மேந்திராவின் பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார் ஹேமமாலினி! கலைத் துறை பட்டியல்!

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam






