‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மாணவர்களுக்கு தேசிய திறனறிப் போட்டி

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனறிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனறிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
 இந்திய இயற்பியல் கழகம் சார்பில் நாடு முழுவதும் மொத்தம் 22 மையங்களில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான அறிவியல் திறனறிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில்,  இந்த ஆண்டுக்கான  தேர்வு உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில்  நடைபெற்றது. உடுமலை, மடத்துக்குளம், பழனி வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர். இதில், 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பின்னர் இரண்டாவது சுற்றுத் தகுதித் தேர்வு வரும் 31 ஆம் தேதி இதே மையத்தில் நடைபெற உள்ளது.
  இதில் தேர்வு பெறுபவர்களுக்கு  அடுத்த சுற்றுத் தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது. தேசியத் 
திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.