திருப்பூர் ரயில் நிலையம் அருகே லாரியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், அவிநாசி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர், திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள குட்ஷெட்டில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் குட்ஷெட்டில் லாரியை நிறுத்திவிட்டுச் சென்றார். சற்று நேரத்துக்குப் பிறகு அவர் வந்து பார்த்தபோது லாரியை காணாவில்லை.
இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததன்பேரில் மண்ணரை சோதனைச் சாவடியில் போலீஸார் அந்த லாரியை மடிக்கிப் பிடித்தனர். லாரியை திருடிச் சென்றது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! ரூ.2,500 எப்போது?

பாலியல் வழக்கில் நார்வே பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!

காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் விலகல்; இங்கிலாந்துக்கு பின்னடைவா?

சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


