பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாடு மீது பைக் மோதல்:  விவசாயி சாவு

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே புதன்கிழமை, மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:14 am

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே புதன்கிழமை, மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள சூரிப்பாளியைச் சேர்ந்தவர் பழனிசாமி (52), விவசாயி. இவருடைய நண்பர் மூலனூர், மார்க்கம்பட்டி முத்தான் (42),  டிராக்டர் டிரைவர்.
இவர்கள் இருவரும் வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயிலுக்கு வந்து விட்டு பைக்கில் மூலனூர் திரும்பிக் கொண்டிருந்தனர். 
அப்போது, புதுப்பை நால்ரோடு அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே புகுந்தது.
மாட்டின் மீது பைக் மோதியதில் பைக்கை ஓட்டி வந்த பழனிசாமி கீழே விழுந்து காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்தான் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மூலனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.