திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 350 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 33 லட்சம் கல்வி உதவித் தொகையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சிப் பள்ளியில் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் எம். சுப்பிரமணி தலைமை வகித்தார்.
ஆர். பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் சண்முகம் வரவேற்றார். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 850 முதல் 1160 மதிப்பெண்கள் வரை பெற்று கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவ, மாணவியர் 350 பேருக்கு மொத்தம் ரூ. 33 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. துணைத் தலைவர்கள் கே.ராமலிங்கம், சிவபாலன், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


