சேவூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சேவூர் அருகே ஆணைக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் சுப்பிரமணியம் (40). இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஆணைக்கல் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியம் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.