எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

வன விலங்கு கணக்கெடுப்பு

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :21 மே 2018, 11:04 pm

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த இரு வனச் சரகங்களில் மே 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இதற்காக உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு ஒரு வன ஊழியர், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர், ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு இந்தப் பணிகளை கவனிப்பர்.
ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பணிகள் நடைபெற உள்ளன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.