வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரூ.1.60 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

Updated On :12 நவம்பர் 2018, 10:18 pm


உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி, சிவசக்தி காலனியில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், சின்ன வீரம்பட்டி பேருந்து நிலையத்தில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பயனிகள் நிழற்குடை அமைக்கவும் பூமி பூஜை நடைபெற்றது. மேலும், உடுமலை- செஞ்சேரி மலை சாலையில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டவும் பூமி பூஜை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்த விழாக்களில் கலந்துகொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஆவின் நிறுவன துணைத் தலைவர் கே.மனோகரன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.