உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி, சிவசக்தி காலனியில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், சின்ன வீரம்பட்டி பேருந்து நிலையத்தில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பயனிகள் நிழற்குடை அமைக்கவும் பூமி பூஜை நடைபெற்றது. மேலும், உடுமலை- செஞ்சேரி மலை சாலையில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டவும் பூமி பூஜை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்த விழாக்களில் கலந்துகொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஆவின் நிறுவன துணைத் தலைவர் கே.மனோகரன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதமமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து சசிகலா பரப்புரை

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

