வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பராமரிப்பின்றி திறந்தவெளிக் கிணறு உள்ளது. இதற்கு பாதுகாப்பான கம்பிவலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளக்கோவில், கரூர் சாலையில், காவல் நிலையம் எதிரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் சுமார் 60 அடி ஆழமுள்ள திறந்தவெளிக் கிணறு உள்ளது.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கிராம நிர்வாக அலுவலகம், நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் திறந்தவெளிக் கிணற்றின் அருகில் செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதன் தண்ணீரை ஒன்றிய அலுவலகக் கழிவறைக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கிணற்றில் இருக்கும் சிறிதளவு தண்ணீரில் குப்பை கூளங்கள் அசுத்தமாக மிதக்கின்றன. இதனால் கொசுக்கள் பெருகுகின்றன. கிணற்றின் சுவரில் ஒரு மரமும் வளர்ந்துள்ளது.
இந்தக் கிணற்றைச் சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், பாதுகாப்புக் கம்பி வலை அமைக்கவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

