திருப்பூரில் பாஜக பொறுப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட பாஜக பிற்பட்டோர் பிரிவு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் முனீஸ்வரபாண்டியன் (40). இவரது வீடு கொங்கு பிரதான சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், முனீஸ்வரபாண்டியன் திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகில் தனது காரை நிறுத்தி விட்டுச்சென்றுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வீட்டின் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதா என காவல் துறையினர் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
