நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு

திருப்பூரில் பாஜக பொறுப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 7:52 am IST

திருப்பூரில் பாஜக பொறுப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:   திருப்பூர் மாவட்ட பாஜக பிற்பட்டோர் பிரிவு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் முனீஸ்வரபாண்டியன் (40). இவரது வீடு கொங்கு பிரதான சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், முனீஸ்வரபாண்டியன் திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகில் தனது காரை நிறுத்தி விட்டுச்சென்றுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.   
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வீட்டின் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதா என காவல் துறையினர் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.