வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

அவிநாசியில் 100க்கும் மேற்பட்ட  பள்ளிகள் திறக்கப்படவில்லை

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என

Updated On :23 ஜனவரி 2019, 9:41 am IST

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் முடங்கியன.
  அவிநாசி  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு 
 பொறுப்பாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் கருப்பன், ரமேஷ்குமார், துரைசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.