திருப்பூரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கிளை மேலாளர்கள் 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் நீதிமன்ற வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரிவு மேலாளர்களாக கோவை டாடபாத்தைச் சேர்ந்த அருண்குமார் (30), ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு (54), திருப்பூர், கவுண்டம்பாளையம் நால்ரோட்டை சேர்ந்த திவாகர் (30), சங்கர், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2017 ஜனவரி முதல் 2018 பிப்ரவரி வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு நிறுவனத்துக்கு செலுத்தாமல் போலி ரசீது தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் நாகராஜன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் போலி ரசீது தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அருண்குமார், வெங்கடேஷ் பாபு, திவாகர் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

எரிபொருள் தட்டுப்பாடு: ரயிலில் சென்ற ராஜஸ்தான் துணை முதல்வர்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
