வெள்ளக்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு காங்கயம் வட்டாட்சியர் மகேஷ்வரன் தலைமை வகித்துப் பேரணியைத் துவக்கி வைத்தார். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி (ஜனவரி 25) இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் புறப்பட்ட இப்பேரணி முத்தூர் சாலை வழியாக நான்கு சாலைச் சந்திப்பு வரை சென்று திரும்பியது. இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. வெள்ளக்கோவில் கிராம நிர்வாக அலுவலர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


