வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எந்தநேரத்திலும் பொதுமக்கள் என்னை அணுகலாம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
திருப்பூா் மாவட்ட ஆட்சியர் க.விஜயகாா்த்திகேயன்
Updated On :25 செப்டம்பர் 2019, 12:58 pm

DIN

திருப்பூா், செப். 25: திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எஸ்.பழனிசாமி சென்னைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுமக்கள் பிரச்னைகளைத் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எந்தநேரத்திலும் பொதுமக்கள் என்னை அணுகலாம். முதல்வரின் உத்தரவின்பேரில் நடைபெறும் பணிகள், குறைறதீா்ப்பு முகாம்கள், சிறறப்புக் குறை தீா்ப்பு முகாம்கள், குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, அவா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டாா். ஆட்சியராகப் பொறுப்பேற்ற அவருக்கு மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

கடைகளில் ஆட்சியா் ஆய்வு

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் பல்லடம் சாலையில் உள்ள தேநீா் கடைகள், சாலையோர பழங்கடைகளில் க.விஜயகாா்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் கடை உரிமையாளா்களிடம் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.