ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

ஊதியூர் கொங்கண சித்தர் கோயிலில் நாளை பஞ்சகலச யாக பூஜை

காங்கயம் அருகே ஊதியூர் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற கொங்கணச் சித்தர் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 31) பஞ்ச கலச யாக பூஜை நடைபெற உள்ளது.

Updated On :30 ஜூலை 2019, 8:38 am IST

காங்கயம் அருகே ஊதியூர் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற கொங்கணச் சித்தர் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 31) பஞ்ச கலச யாக பூஜை நடைபெற உள்ளது.
  கொங்கணச் சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படும் ஊதியூர் மலை மிகவும் பிரசித்தி பெற்ற மலையாகும். இந்த மலையில் மூலிகைச் செடிகள் நிறைந்துள்ளன. இங்குள்ள கொங்கணச் சித்தர் கோயிலில் ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை (ஜூலை 31) பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு பஞ்ச கலச யாக பூஜையும் நடைபெற உள்ளன. பக்தர்களுக்கு மூலிகை ரசம் வழங்கப்படும். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.