47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூர் அருகே தனியார் நூற்பாலையில் மீட்கப்பட்ட 38 சிறுவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

திருப்பூரை அடுத்த சேவூர் அருகே தனியார் நூற்பாலையில் இருந்த மீட்கப்பட்ட 38 சிறுவர், சிறுமியர் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.

News image
தனியார் நூற்பாலையில் இருந்து மீட்கப்பட்ட 38 சிறுவர்கள்.
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:53 pm

DIN

திருப்பூரை அடுத்த சேவூர் அருகே தனியார் நூற்பாலையில் இருந்த மீட்கப்பட்ட 38 சிறுவர், சிறுமியர் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூர் அருகே ஆலத்தூர் மேடு பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பொதுமுடக்கத்தின்போது உரிய அனுமதி இல்லாமல் வெளிமாவட்டங்களைக் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, காவல் துறையினர், தொழிலாளர்துறையினர் சம்மந்தப்ப ஆலையில் ஆய்வு நடத்தி 35 சிறுமியர், 3 சிறுவர்கள் என மொத்தம் 38 பேரை மீட்டு திருப்பூரில் உள்ள காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையிலவ் தனி பேருந்து மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.