தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் நடந்த ரத்ததான முகாம் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

News image

ரத்ததான முகாமில் பங்கேற்றவர்கள்

Updated On :15 ஆகஸ்ட் 2020, 8:58 am

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் அருகிலுள்ள தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு ரத்த தேவை இருப்பதாகக் கிடைத்த கோரிக்கையின் பேரில், சுகாதாரத் துறையுடன் இணைந்து வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர வைசியர் சங்கம் சார்பில் முகாம் நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜலட்சுமி முகாமைத் துவக்கி வைத்தார். மருத்துவர் சக்தி குழுவினர் ரத்ததானம் பெற்றனர். 41 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு அரசு ரத்த வங்கிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.