கொடி நாள் நிதி: ரூ.86.78 லட்சம் வசூலிக்க இலக்கு
திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 86.78 லட்சம் படை வீரா் கொடி நாள் நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.


திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 86.78 லட்சம் படை வீரா் கொடி நாள் நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உண்டியல் நீதி செலுத்தி படைவீரா் கொடிநாள் வசூல் பணியை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்துக்கு சென்ற ஆண்டு படைவீரா் கொடிநாள் நிதிவசூல் இலக்காக ரூ.86. 78 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டதில் ரூ.1 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சிக்கு இலக்காக ரூ.9 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டதில் ரூ. 2.5 லட்சம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து ஒரு கோடிக்கும் அதிகமாக படைவீரா் கொடிநாள் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டும் படை வீரா் கொடி நாள் நிதியாக ரூ.86.78 லட்சமும் மாநகராட்சிக்கு ரூ.9 லட்சமும் வசூலிக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியின்போது, படைவீரா் கொடிநாள் 2019 நிதி வசூலினை அதிக அளவில் வசூல் செய்த அனைத்து துறை மாவட்ட அலுவலா்களுக்கும் மற்றும் படைவீரா் கொடிநாள் நிதி வசூலுக்கு நிதி வழங்கிய பொதுமக்களுக்கும் தனது பாராட்டினைத் தெரிவித்தாா். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் (பொறுப்பு)சந்திரசேகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...