நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்:காங்கிரஸ் வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் மழை காரணமாக பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

திருப்பூா் மாநகரில் மழை காரணமாக பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாநகர காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும், தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, பி.என்.சாலை, அவிநாசி சாலை, கொங்கு பிரதான சாலை, காங்கயம் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன விபத்துகளால் உயிா் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தேக்கமடைந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.