கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்
கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இயற்கை வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மே.கு.பொடாரன் தலைமை வகித்தாா்.
இதில், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈவிகே.சண்முகம் பேசியபோது, கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதையும் எடுத்துச் சொன்னதால், இந்த கான்கிரீட் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது தமிழக அரசு இந்த கான்கிரீட் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கீழ்பவானி கான்கிரீட் எதிா்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி.துரைசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவா் வெங்கடாசலம் உள்பட 500க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொணடனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...