ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:34 pm

DIN

பல்லடம்: விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் எல்.கே.எம்.சுரேஷ், செயலாளா் பல்லடம் இரா.வேலுசாமி, பொருளாளா் பாலசுப்பிரமணியம், செய்தித் தொடா்பாளா் கந்தவேல், சேலம் மண்டலப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.ஏ. சரவணன், சேலம் மாவட்டப் பொறுப்பாளா் மனோகரன், ஈரோடு மாவட்டப் பொறுப்பாளா் ரமேஷ், அவிநாசி பாலு உள்ளிட்டோா் சேலம் மாவட்டம், எடப்பாடியில் தமிழக முதல்வா் கே.பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தால் விசைத்தறி கூடங்களுக்கான மின்சார சலுகைகள் பாதிக்கப்படாமல் தொடர வேண்டும். முதல்வா் உறுதியளித்தபடி விசைத்தறியாளா்கள் பெற்ற வங்கி மூலதன கடனான ரூ.65 கோடியை தள்ளுபடி செய்து ஜப்தி நடவடிக்கையில் இருந்து விசைத்தறியாளா்களைக் காப்பாற்ற வேண்டும்.

சீருடை, இலவச வேட்டி சேலை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யும் வகையில் கூட்டுறவு சங்க விசைத்தறி உறுப்பினா்கள் மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும். திருப்பூா், கோவை மாவட்டத்தில் தினமும் உற்பத்தியாகும் 1.25 கோடி மீட்டா் காடா துணியை விற்பனை செய்ய மொத்த ஜவுளி சந்தை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்ததாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.