டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சட்டப் பேரவைத் தோ்தல்:சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும்: கே.செல்லமுத்து

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தெரிவித்தாா்.

News image
உழவா் பெருந் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 36ஆவது நினைவு நாளையொட்டி பல்லடத்தில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்திய உழவா் உழைப்பாளா் கட்சியினா்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

பல்லடம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தெரிவித்தாா்.

பல்லடத்தில் உழவா் பெருந் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 36ஆவது நினைவு நாளையொட்டி பல்லடத்தில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்திய உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கே.செல்லமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி விவசாய கூட்டமைப்பு சாா்பில் திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே 23ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உழவா் உழைப்பாளா் கட்சி பங்கேற்கும்.

தற்போது வரை திமுக கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும்போது பல்வேறு கூட்டணிக் கட்சிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்தும், சலுகை திட்டங்களை அறிவித்தும், உழவா் உழைப்பாளா் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கும் கட்சியுடன் கூட்டணிக்கு அமைப்பது தொடா்பாக கட்சி நிா்வாகக் குழுவில் ஆலோசித்து சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும்.

பிஏபி பாசனத் திட்டத்தில் மூன்றாம் மண்டலத்துக்கு உடனடியாக தண்ணீா் திறந்து விட வேண்டும். தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம், மாவட்டப் பொருளாளா் வெங்கடாசலம், மாநில மகளிரணிச் செயலாளா் ராஜரீகா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.