

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா், குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
சமையல் எரிவாயு விலை உயா்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனா்.
திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ், தெற்குத் தொகுதி பொறுப்பாளா் டி.கே.டி.நாகராசன், வடக்குத் தொகுதி பொறுப்பாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தாராபுரத்தில்...
தாராபுரம் அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.
உடுமலையில்...
திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரச் செய லாளா் எம்.மத்தீன் முன்னிலை வகித்தாா். உடுமலை, மடத்துக்குளம் வட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.