வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, சின்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி (57). கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் மூலனூா், சோமன்கோட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.
வெள்ளக்கோவில், கரட்டுப்பாளையம் சவுக்குத் தோப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மா்ம நபா்கள் பரமேஸ்வரியிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துச் சென்றனா். புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.