அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் பலியானார்கள்.
அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி
Updated on
1 min read

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் பலியானார்கள்.

அவிநாசி அருகே நரியம்பள்ளிப்புதூரில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவயிடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனர்.அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன்(41), அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ஆனந்தகுமார்(37) ஆகியோர் அவிநாசி அடுத்த கருவலூர் நரியம்பள்ளிப்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகோபாலகிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இவர்களது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்கப்பட்டு, அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து அவிநாசி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com