ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் பலியானார்கள்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:43 am

DIN

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் பலியானார்கள்.

அவிநாசி அருகே நரியம்பள்ளிப்புதூரில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவயிடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனர்.அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன்(41), அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ஆனந்தகுமார்(37) ஆகியோர் அவிநாசி அடுத்த கருவலூர் நரியம்பள்ளிப்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகோபாலகிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இவர்களது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்கப்பட்டு, அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து அவிநாசி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.