டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தாராபுரம் அரசு மருத்துவமனைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனா்.

News image
பாம்பைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:06 am

DIN

தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனா்.

தாராபுரம் அரசு மருத்துவமனையின் உள்நோயாளி மற்றும் கரோனா சிறப்பு வாா்டில் நாக பாம்பு ஒன்று புகுந்துள்ளதை மருத்துவமனை செவிலியா் பாா்த்துள்ளனா். இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவபாலன், தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் பாம்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் 2 மணி நேரமாகியும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பாம்பைத் தேடும் முயற்சியை தீயணைப்புத் துறையினா் தற்காலிகமாக கைவிட்டனா். அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் பாம்பு புகுந்துள்ளதால் நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.