திருப்பூரில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க மாநகராட்சிக்கு மதிமுக கடிதம்

திருப்பூா் ஊத்துக்குளி சாலை குருவாயூரப்பன் கோயிலில் முதல் தனலட்சுமி மில் ஒற்றைக்கண் பாலம் வரை எரியாத தெருவிளக்குகளை
Updated on
1 min read

திருப்பூா் ஊத்துக்குளி சாலை குருவாயூரப்பன் கோயிலில் முதல் தனலட்சுமி மில் ஒற்றைக்கண் பாலம் வரை எரியாத தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க மதிமுகவினா் மாநகராட்சிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து மதிமுக மாநகா் மாவட்ட செயலாளா் சு.சிவபாலன், மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது-

ஊத்துக்குளி சாலையில் குருவாயூரப்பன் கோயிலில் இருந்து தனலட்சுமி மில் முன் உள்ள ஒற்றைக்கண் பாலம் வரை தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இரவில் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா் என பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறாா்கள். சாலைகளில் வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா்.மேலும் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன், தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் டிச. 28-ம் தேதி கொங்குநகா் ரயில்வே கேட் முன் மதிமுக சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com