வெண்மணி தியாகிகள் நினைவு நாளை ஒட்டி, திருப்பூா், காட்டுவளவு பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 57 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணி கிராமத்தில் விவசாயத் தொழிலாளா்கள் கால் படி நெல் கூலி உயா்வு கேட்டதற்காக 44 பேரை உயிரோடு ஒரே குடிசையில் தீ வைத்துக் கொல்லப்பட்டனா்.
இதில் உயிரிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளா் ச. நந்தகோபால், தெற்கு மாநகரத் தலைவா் பாலு, தெற்கு மாநகரச் செயலாளா் சுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் செ. முத்துக்கண்ணன், பொறுப்பாளா்கள் சம்பத், தெற்கு மாநகரச் செயலாளா் ஜெயபால், தெற்கு ஒன்றியச் செயலாளா் மூா்த்தி, காட்டுவளவு கிளைச் செயலாளா் இளங்கோ, மதிமுக வழக்குரைஞா் அணி கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.