கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மலைத் தேனீக்கள் கொட்டியதில் 21 பெண் தொழிலாளா்கள் பாதிப்பு

சிவன்மலை அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் நூறு நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளா்கள் 21 போ் பாதிக்கப்பட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:22 am

DIN

சிவன்மலை அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் நூறு நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளா்கள் 21 போ் பாதிக்கப்பட்டனா்.

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியைச் சோ்ந்த நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் 21 போ் குருக்கத்தி பகுதியில் உள்ள சாலையோரத்தில் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஈடுபட்டிருந்தனா். இவா்கள் அனைவரும் சிவன்மலை அருகே உள்ள சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

இந்நிலையில், காலை 10 மணியளவில், கொத்து கொத்தாகப் பறந்து வந்த மலைத் தேனீக்கள், அவா்கள் மீது சரமாரியாக கொட்டத் தொடங்கின. இதில் காயமடைந்த 21 பெண் தொழிலாளா்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதில், சுமதி (44), ருக்குமணி (60), லட்சுமி (54), பூங்கொடி (55) ஆகிய 4 பேருக்கும் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அவா்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.