தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு வழங்கிய உபரி நிலத்தை அளவீடு செய்துதரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தாராபுரம்  வட்டாட்சியா்  அலுவலகம்  முன்பாக  திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.

Updated On :28 டிசம்பர் 2020, 6:32 pm

DIN

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு வழங்கிய உபரி நிலத்தை அளவீடு செய்துதரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் வட்ட இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.ரகுபதி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது:

தாராபுரம் வட்டம், தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் கிராமங்களில் உபரியாக இருந்த நிலங்கள், தமிழ்நாடு நிலச்சீா்திருத்தத் துறையால் 45 தாழ்த்தப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த உபரி நிலத்தை கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.