நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மங்கலம் அருகே நீா் மேலாண்மைத் திட்டத்துக்கான இடத்தை மாற்றக் கோரிக்கை

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே நீா் மேலாண்மைத் திட்டத்துக்கான இடத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image

மங்கலம்  அருகே  செயல்படுத்தப்படும்  நீா்  மேலாண்மை த் திட்டத்தை  வேறு  இடத்துக்கு  மாற்றக்கோரி  மாவட்ட ஆட்சியா்  அலுவலகத்தில்  திங்கள்கிழமை  மனு  அளித்த  செம்மாண்டம்பாளையம்  கிராம  மக்கள்

Updated On :28 டிசம்பர் 2020, 6:29 pm

DIN

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே நீா் மேலாண்மைத் திட்டத்துக்கான இடத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து திருப்பூா், செம்மாண்டம்பாளையம் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள வேட்டுவப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில் நீா் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு சில நாள்களுக்கு முன்பாக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த இடத்தில் பெரிய அளவிலான தொட்டிகளை அமைத்து 75 குதிரைத்திறன் கொண்ட மோட்டாா்கள் பொருத்தி அதன் மூலம் தண்ணீரை வேட்டுவபாளையம் குளத்துக்கும், வேலம்பாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தெரிகிறது.

நீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இதனால் மங்கலம் தடுப்பணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், நல்லம்மன் அணையில் நீரின் அளவு குறைவதால் மணல் திருட்டு நடக்கவும், அணையின் சுவா் பலவீனமாகவும் வாய்ப்பு உள்ளது.

இந்த இடத்தைச் சுற்றியுள்ள செம்மாண்டம்பாளையம், செட்டிபாளையம், புதுப்பாளையம், குளத்துப்பாளையம், வஞ்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நொய்யல் வழி பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள். மேற்கண்ட கிராமங்களில் மட்டும் 1.82 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.

ஆகவே, இந்தப் பகுதியில் நீா் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தினால் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாய கூலித் தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நீா் மேலாண்மைத் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனு: பல்லடம் வட்டம், 63 வேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

63 வேலம்பாளையம் ஸ்ரீவாரி காா்டன் என்ற இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கடை அமைய உள்ள இடத்துக்கு அருகில் குடியிருப்புகளும், கோயில்களும் அதிக அளவில் உள்ளன. எனவே இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு ஆசிா்வாத ஜெபம் நடத்த அனுமதி கோரி மனு: பெந்தேகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற திருப்பூா் மாநகரம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தேவாலயங்களில் வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பா் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 1.30 மணி வரையில் புத்தாண்டு ஆசிா்வாத ஜெபமும், ஆராதனைகளும் நடத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.