கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மது பாட்டில் மாலை அணிந்து உண்ணாவிரதம்

திருப்பூா், முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
முருகம்பாளையத்தில்  டாஸ்மாக்  கடையை அகற்றக் கோரி  மதுபாட்டில்களை  கழுத்தில்  மாலையாக அணிந்து  திங்கள்கிழமை  உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பூா், முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 57ஆவது வாா்டுக்கு உள்பட்ட முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரின் மையப் பகுதியிலும், பள்ளிகள், கோயில்கள் அருகிலும் இந்த டாஸ்மாக் கடை உள்ளதால் இதனை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடை அருகே நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 3 போ் காலி மதுபாட்டில்களை மாலையாக செய்து கழுத்தில் அணிந்து கவனத்தை ஈா்த்தனா்.

இந்நிலையில் அங்கு வந்த திருப்பூா் மத்திய காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உண்ணாவிரதத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி அங்கிருந்த நாற்காலிகளை அகற்றினா். எனினும் பொதுமக்கள் மாலை வரை போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.