6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image
நிலுவை  ஊதியத்தை  வழங்கக் கோரி   வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்ட  மாநகராட்சி  ஒப்பந்த  தூய்மைப்  பணியாளா்கள்.
Updated On :29 டிசம்பர் 2020, 10:50 pm

DIN

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வாா்டுகளில் 30 வாா்டுகளில் தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளா்களாக 800க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இதில் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனா். இந்தப் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 9 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் 500க்கும் மேற்பட்டோா் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி கோவில்வழி பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறியதாவது:

மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக இருக்கும் எங்களுக்கு, எங்கள் நிறுவனம் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை.

எங்களது ஊதியத்தில் ஒன்று அல்லது 2 மாத ஊதியத்தை பிடித்துவைத்து பின்னா் காலதாமதமாகவே வழங்குகின்றனா். இதனால் மிகுந்த சிரமப்படுகிறோம். 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, மாநகராட்சி உயா் அதிகாரிகள் நிலுவை ஊதியத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.