6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழில் முனைவோா் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சா் எம்.சி.சம்பத்

தொழில் முனைவோா் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 7:14 pm

DIN

தொழில் முனைவோா் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் புதன்கிழமை தெரிவித்தாா்.

பல்லடம் நகரத்துக்கு புதன்கிழமை வந்த அமைச்சா் எம்.சி.சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீா்நிலைகள் தூா்வாரியதன் மூலம் மழைநீா்சேகரிக்கப்பட்டு வேளாண்மையில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. புதிதாக 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 40 கலை அறிவியல் கல்லூரிகள், 249 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. கரோனா காலத்திலும் தொழில் முதலீட்டை ஈா்த்ததில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எளிய நடைமுறை, விரைவான சேவை, பல்வேறு சலுகைகள் ஆகியவற்றின் காரணமாக தொழில் முனைவோா் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா்.

பல்லடம் நகர அதிமுக செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் வைஸ் பி.கே.பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.