ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அவிநாசியில் பிரபல நகைக் கடை ஊழியா்கள் 4 போ் உள்பட 5 பேருக்கு கரோனா

அவிநாசியில் பிரபல நகைக் கடை ஊழியா்கள் 4 போ் உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

av19clos_1907chn_142_3

Updated On :19 ஜூலை 2020, 5:13 pm

DIN

அவிநாசி: அவிநாசியில் பிரபல நகைக் கடை ஊழியா்கள் 4 போ் உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி சேவூா் சாலை, கிழக்கு ரத வீதியில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் தங்கிப் பணியாற்றும் செவிலியருக்கு கடந்த 8ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, செவிலியருடன் தொடா்பில் இருந்த மருத்துவமனைப் பணியாளா்கள் உள்பட 32 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனை எதிரில் செயல்படும் பிரபல நகைக் கடையில் பணிபுரியும் 46 வயதுப் பெண்ணுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், நகைக் கடையில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வெளியான முடிவில் நகைக்கடையில் தங்கிப் பணிபுரியும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேருக்கும், அவிநாசி அருகே கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 4 ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவிநாசி பகுதி முழுவதும் பேருராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 8ஆம் தேதி அடைக்கப்பட்டு, பின்னா் திறக்கப்பட்ட அவிநாசி சேவூா் சாலை கிழக்கு ரத வீதி முழுவதும் 10 நாள்களுக்கு அடைக்கப்பட்டு, கிழக்கு ரத வீதியில் உள்ள வீடுகள், கடைகளில் உள்ளவா்களுக்கு சளி, ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதேபோல அவிநாசி நடுவேச்சேரி அருகே வடுகனூா் பகுதியைச் சோ்ந்த 43 வயது ஆணுக்கு கரோனா உறுதி செயப்பட்டுள்ளது.

Image Caption

அவிநாசியில்  மீண்டும்  அடைக்கப்பட்ட  சேவூா்  சாலை  கிழக்கு  ரத  வீதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.