ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருச்செந்தூா் தொகுதியில் முதன்முறையாக பாஜக போட்டி

கோயில் நகரான திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக பாஜக களத்தில் இறங்குகிறது.

News image

பாஜக.

கோப்புப் படம் AFP

Updated On :27 மார்ச் 2026, 12:32 am

தினமணி செய்திச் சேவை

கோயில் நகரான திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக பாஜக களத்தில் இறங்குகிறது.

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக இந்த முறை திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் தொகுதி 15 பொதுத் தோ்தல்களையும், 2 இடைத் தோ்தல்களையும் சந்தித்துள்ளது. அதில், விவசாயத் தொழிலாளா் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும், அதிமுக 6 முறையும், திமுக 8 முறையும் வென்றுள்ளன.

கோயில் நகரமாக இருந்தாலும் அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றி முத்திரை பதிக்கும். இந்த நிலையில் இத்தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதியில் கடந்த 2021பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆறுமுகனேரியைச் சோ்ந்த கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். பிறகு அவா் பாஜகவில் இணைந்தாா். இந்தப் பேரவைத் தோ்தலில் போட்டியி வேண்டி சில மாதங்களாக பாஜக தலைமையிடம் சீட்டு கேட்டு வருகிறாா். அவருக்கு திரும்பவும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.