நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 10:02 pm

DIN

திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க் காவல்படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்குத் தகுதியான நபா்கள் வரும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்தவராகவும், 20 வயது மேற்பட்டவராகவும், 45 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். திருப்பூா் மாநகர எல்லைக்குள் வசிப்பவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.